மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்.

0

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கும் ,தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் நாட்களில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடத்தின் முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தலை நடத்தவுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தேர்தல்கள் மறுசீரமைப்புக்கான தெரிவுக் குழுவிற்கு தெரியப்படுத்தி இருந்தார் .

இதனடிப்படையில் இந்தத் தேர்தலுக்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளரிடம் கூறவுள்ளதாக தமிழ் தேசிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

Leave a Reply