விவசாயிகளினால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்.

0

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று விவசாயிகளினால் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கமைய குறித்த போராட்டம் விவசாயிகள் முகம் கொடுத்துள்ள உரத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே முன்னெடுக்கப்படுவதாக தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த போராட்டம் வடக்கு, கிழக்கில் உள்ள சகல கமநல சேவை நிலையங்களுக்கு முன்பாகவும் இன்று காலை 9 மணிமுதல் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply