இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை.

0

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அத்துடன் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் சிறியளவில் மழை பெய்யும்.

அவ்வாறு நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் திருகோணமலை மாவட்டத்திலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோ மீட்டர் வேகம் வரை அதிகரிக்க கூடிய சாத்தியம் காணப்படுகின்றது..

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply