தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளின் திறப்பு நேரம் தொடர்பில் வெளியான தகவல்.

0

தமிழகத்தில் கடந்த 11ஆம் திகதி உணவுத்துறை அமைச்சர் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதற்கமைய குறித்த கலந்துரையாடலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அங்கு உள்ள அனைத்து ரேஷன் அட்டைக்காரர்களும் பயனடையும் வகையில் நவம்பர் மாதத்திற்கான சிறப்பு அத்தியாவசிய பொருட்களை கடைக்கு கொண்டு வருவதை முழுமையாக முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

இந்நிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி தீபாவளி பண்டிகை ஆகும்.

இதன் பிரகாரம் 1,2 மற்றும் 3 ந் திகதிகளில் இந்த ரேசன் கடைகள் காலை 8 மணியிலிருந்து மாலை 7 மணிவரை திறக்கப்பட வேண்டும் என்று அந்த கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

நவம்பர் மாதத்தின் சிறப்பு அத்தியாவசியப் பொருட்களின் அதிகபட்சமான முன்னகர்வு முழுமையாக முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply