இன்றைய வானிலை தொடர்பில் வெளியான தகவல்.

0

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் மத்திய, சப்ரகமுவ, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அவ்வாறு வட மாகாணத்தின் சில பகுதிகளிலும் இன்று காலை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் திருகோணமலை மாவட்டத்தில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறனர்.

Leave a Reply