கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்து.

0

கிளிநொச்சி டிப்போ சந்தியில் கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதற்கமைய குறித்த விபத்துச் சம்பவம் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து ஏ- 9 வீதியூடாக கிளிநொச்சி நோக்கி பயணித்த டிப்பர் வாகனமே இவ்வாறு கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இருப்பினும் குறித்த விபத்தினால் ஆபத்தும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்

Leave a Reply