இரத்தினபுரி- வேவெல்வத்த படேபொல பகுதியில் போலி சாரதி அனுமதி பத்திரம் தயாரித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் மூவரும் இரத்தினபுரி காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போதே போலி ஆவணங்களை தயாரிக்க உதவிய நபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் ,34, 42 மற்றும் 44 வயதுடைய சந்தேகநபர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக இரத்தினபுரி சிறப்பு கூட்டு விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.