பூஸ்டர் தடுப்பூசியை விரைவாக செலுத்துமாறு கோரிக்கை!

0

சைனோ பார்ம் மற்றும் சினோவெக் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட , 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, மூன்றாம் கட்ட தடுப்பூசியை விரைவாக செலுத்துமாறு தடுப்பூசி திட்டம் தொடர்பான விசேட ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் குறித்த தடுப்பூசிகளைப் ஏற்றுக்கொண்ட வயது முதிர்ந்தவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைந்ததாக சர்வதேச ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூற்று உயிரியல் துறை பேராசிரியர் சந்திம குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்த அறிக்கை இன்று அல்லது நாளை வெளியிடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply