துப்பாக்கி பயன்படுத்தப்படும் 401 தோட்டாக்களுடன் ஒருவர் அதிரடிக் கைது.

0

துப்பாக்கி பயன்படுத்தப்படும் 401 தோட்டாக்களுடன் ஒருவர் அதிரடிக் கைது செயப்படுள்ளார்.

இதற்கமைய குறித்த சம்பவம் முல்லைத்தீவு மாவட்டம் புதுமாத்தளன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் ரீ- 56 ரகத் துப்பாக்கி பயன்படுத்தப்படும் 401 தோட்டாக்களுடன் நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply