தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் கல்விசாரா ஊழியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க மாட்டார்கள்.

0

எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் தமக்குரிய தீர்வினை பெற்று தர வேண்டும் என கல்விசாரா ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

குறித்த பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் தங்களின் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என கல்விசாரா ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அத்துடன் பதவி நிலைகளின் அடிப்படையிலான பாகுபாடு , வருடாந்த இடமாற்றம் உள்ளிட்ட இந்த கோரிக்கைகளுக்கு இந்த தீர்வு வழங்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு எதிர்வரும் 21 ஆம் திகதி தங்களுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் கல்விசாரா ஊழியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்க மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply