இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் ஊவா மாகாணத்தின் சில இடங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் மழை பெய்யும்.
அவ்வாறு நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் சீரான வானிலை நிலவும்.
இடியுடன் கூடிய மழையின் சந்தர்பங்களில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அனைவரும் அறிவுறுத்தப்படுகின்றனர் .