சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் அதிரடிக் கைது!

0

சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் அதிரடியாகக் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய குறித்த நபர்கள் காவல்துறை விசேட அதிரடிப் படையினரின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 333 சட்டவிரோத மதுபான போத்தல்களும், இரண்டு சப்பு கம்பிகளும் , ஒரு எரிவாயு கொள்கலனும், நான்கு பீப்பாய்க்களும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் மினுவாங்கொடை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply