மீண்டும் தொடர்ந்து செல்லவுள்ள போராட்டம்.

0

தமது போராட்டம் மீண்டும் தொடர்ந்து செல்லும் என அதிபர்- ஆசிரியர் தொழிற்சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய தமது வேதன முரண்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு அதிபர்- ஆசிரியர் தொழிற்சங்கத்தினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தமக்கு உரிய தீர்வு கிடைக்கு வரையில் குறித்த போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளனர்.

நேற்றைய தினம் பிரதமருடன் இடம்பெற்ற சந்திப்பு குறித்து கலந்துரையாடுவதற்கு இன்றைய தினம் அதிபர்கள் – ஆசிரியர்கள் தொழிற்சங்கத்தினர் ஒன்று கூடியிருந்தனர்.

இந்த ஒன்றுகூடலை தொடர்ந்தே போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

Leave a Reply