இரசாயன பசளைகள் இறக்குமதியை முழுமையாக நிறுத்தி சேதனப் பசளையூடாக மாத்திரம் பயன்படுத்த வேண்டும்.

0

நஞ்சற்ற உணவை மக்களுக்கு வழங்குவதற்காக இரசாயன பசளைகள் இறக்குமதியை முழுமையாக நிறுத்தி சேதனப் பசளையூடாக மாத்திரமே விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை அரசாங்கம் வலியுறுத்துகின்றது.

இந்த வேளையில் விவசாய நிலங்களில் காணப்படும் களைகளைக் கட்டுப்படுத்துதல், நோய்களைக் கட்டுப்படுத்துதல், பயிர்களுக்கு தேவையான கனியுப்பக்களை வழங்குதல் போன்றவற்றில் பல சவால்களுக்கு முகங் கொடுத்து விவசாய செய்கையில் நம்பிக்கை இழந்து பல போராட்டங்கள் நடைபெறுகின்ற இந்த நேரத்தில் விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சியாக மண்ணை பன்படுத்தும் புதிய வேலைத்திட்டம் இன்று கிண்ணியா புளியடிக்குடா பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் திருகோணமலை வலைய உதவி விவசாயப் பணிப்பாளர் திருமதி சீ.ஆர்.டி. துஸ்யந்தி, விவசாய போதனாசிரியர் ஆர். எம்.ரஸீன், மற்றும் விவசாயிகள் என பலரும்கலந்து கொண்டனர்.

Leave a Reply