இலங்கையில் மிகவும் குறுகிய காலத்தில் யொஹானி டி சில்வா மிகவும் பிரபலமான பாடகியாக பிரபலம் அடைந்துள்ளார்.
“மெனிக்கே மகே ஹித்த ” என்ற பாடல் மூலம் இரசிகர் மத்தியில் இடம்பிடித்த யொஹானி டி சில்வா இந்தியாவில் இசை நிகழ்ச்சிக்காக பங்கேற்பதற்கு சென்று இருந்தார்.
இவ்வாறு இந்தியாவிற்கு சென்றிருந்த அவர், நேற்றைய தினம் இரவு 11.25 க்கு இலங்கையை வந்தடைந்தார்.
மேலும் இரண்டு வாரங்கள் இந்தியாவில் தங்கியிருந்த அவர் இந்திய பிரபலங்கள் பலரையும் சந்தித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.