மண்ணெண்ணெய் அடுப்பு விற்பனை அதிகரிப்பு.

0

மண்ணெண்ணெய் அடுப்பை கொள்வனவு செய்யும் நிலை
தற்போது அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதை தொடர்ந்தே
குறித்த மண்ணெண்ணெய் அடுப்பை கொள்வனவு செய்யும் நிலை அதிகரித்துள்ளது.

இந்த சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்ததை தொடர்ந்து , பொதுமக்கள் மண்ணெண்ணெய் அடுப்பை பயன்படுத்த வேண்டும் என சமூகத்திலும், சமூக ஊடகங்களிலும் பல்வேறு வகையான கருத்தாடல்கள் இடம்பெற்றன.

இதன் பிரகாரம் கடந்த இரண்டு நாட்களில் புறக்கோட்டை வர்த்தக நிலையங்களில் மண்ணெண்ணெய் அடுப்பு விற்பனை அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை ஐக்கியதேசிய சுயதொழில் வர்த்தகர்களின் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply