எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு தீர்மானம்.

0

இலங்கையில் எதிர்வரும் 21 ஆம் திகதி பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள 90 பாடசாலைகளையே எதிர்வரும் 21 ஆம் திகதி திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் நேற்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டம் – மடு கல்வி வலயத்திற்கு 44 பாடசாலைகளையும் , மன்னார் கல்வி வலயத்தில் 46 பாடசாலைகளையும் மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply