நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் தொடர்பில் நீதி மன்றம் வழங்கிய உத்தரவு.

0

நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் தொடர்பில் நீதி மன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.

ரிசாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் அவர்களுடைய சட்டத்தரணியின் ஊடாக தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான மேலதிக விசாரணைகள் இந்த மாதம் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்யுமாறு கோரியே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும்குறித்த மனு விஜித் மலல்கொட, முர்து பெர்ணான்டோ மற்றும் காமினி அமரசேகர ஆகியவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மேலும் குறித்த மனுவை எதிர்வரும் 15 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply