கரிம உரத்தினை விநியோகிக்கும் வேலை திட்டம் முன்னெடுப்பு!

0

விவசாயிகளுக்கு தேவையான கரிம உரத்தினை விநியோகிக்கும் வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை முதல் விவசாயிகளுக்கு தேவையான கரிம உரத்தினை வழங்க விவசாயத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

முதலில் இந்த வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்பு அனுராதபுரம், பொலநறுவை, மொனராகலை, திருகோணமலை, மட்டக்களப்பு, குருநாகல், கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply