போக்குவரத்து கட்டணத்திலும் உயர்வு ஏற்படுவதற்கு வாய்ப்பு.

0

போக்குவரத்து கட்டணத்திலும் உயர்வு ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் பல வற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் போக்குவரத்து கட்டணத்திலும் உயர்வு ஏற்படும் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் போக்குவரத்துறை அமைச்சர் திலும் அமுனுகம ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இதுவரையில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பில் எந்தவிதமான தீர்மானம் மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் இறுதி முடிவு இதுவரை முன்னெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply