திருட்டில் ஈடுபட்ட நபர்களுக்கு நேர்ந்த கதி.

0

திருகோணமலை தலைமையகப்பொலிஸ் பிரிவிற் உற்பட்ட மத்திய வீதியில் உள்ள மகா சேல் கடையில் பணிபுரியும் இருவருடன் மற்றொரு நபரும் இணைந்து பல லட்சம் பெருமதியான பொருட்களை கொள்ளையிட்ட மூவரை கைதுசெய்துள்ளதாக தலைமையக காவற்துறையினர் தெரிவித்தனர்.

அத்துடன் கொள்ளை பொருட்களை கொன்டு சென்ற ஆட்டோ சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்
தொடர்ந்து மாதக்கணக்கில் குறிப்பிட்ட கடையில் களவு நடைபெற்று வந்துள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கைது இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்

அவர்களிடமிருந்து ஒன்றறை லட்சம் பெறுமதியான பொருட்கள் மீட்கப்பற்றதாக தலைமையகப்பொலிஸார் தெரிவித்தனர்.
களவாடப்பட்ட பொருட்களை கொடுத்து போதைபொருட்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும்
கைதுசெய்யப்பட்டவர்கள் 20,21 வயதுடையவர்கள் எனவும் கைதுசெய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் இன்று(11) பதில் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாக தலைமையப் காவற்துறையினர் தெரிவித்தனர்

Leave a Reply