தமிழகத்தில் ரயில் நிலையங்களில் எச்சில் துப்புவதை தடுக்கும் நோக்கில் புதிய செயற்திட்டம்!

0

தமிழகத்தில் ரயில் நிலையங்களில் எச்சில் துப்புவதை தடுக்கும் நோக்கில் புதிய செயற்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுள்ளது.

ரயில் நிலையங்களில் எச்சில் துப்புவது ரயில்வே நிலையத்திற்கு பாரிய பிரச்சினையாக உள்ளது.

குறிப்பாக பான் மற்றும் புகையிலைப் பொருட்களை மென்று துப்புபவர்களால் ஏற்படும் கறையை அகற்ற ஆண்டுக்கு 1,200 கோடி நிதியும் நிறைய தண்ணீரும் செலவாகின்றது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு தீர்வாக கையடக்க பை மற்றும் பெட்டியை ரயில்வே திணைக்களம் அறிமுகம் செய்துள்ளது.

அத்துடன் 42 ரயில்வே நிலையங்களில் குறித்த பைகள் வழங்கும் கடைகளும் , விற்பனை எந்திரங்களும் நிறுவப்பட்டு வருகின்றன.

ஒரு பை ரூபாய் 5 முதல் 10 வரை விற்பனை செய்யப்படுவந்துடன் இந்தப் பை மூன்று வடிவங்களில் கிடைக்கும்.

மேலும் ரயில்வே வளாகத்தில் இருக்கும் போது எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் இந்த பையில் துப்பிக் கொள்ளலாம்.

இது மறுபயன்பாடு கொண்டது என்பதுடன் 20 தடவை வரை இருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பைக்குள் ஒரு தானிய விதை உள்ளது.
பைய பயன்படுத்திய பிறகு மண்ணில் தூக்கி எறிந்தாள் அது முளைத்து செடியாக வளரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ரயில் நிலையங்களில் எச்சில் துப்புவது தடுக்கும் முகமாக குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டதாக ரயில்வே நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply