இன்று முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி.

0

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இதன் பிரகாரம் இன்று முதல் நாட்டில் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை குறித்த மாணவர்கள் அனைவரும் அருகிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று தடுப்பூசியின் செலுத்திக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இன்று முதல் நாடளாவிய ரீதியில் நாட்பட்ட நோய்கள் மற்றும் விசேட தேவையுடையோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply