இலங்கையின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை!

0

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ , மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

அத்துடன் குறித்த பகுதிகளில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அவ்வாறு வட மத்திய மாகாணத்திலும் சிறிது அளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் சில இடங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவு பகுதிகளிலும் வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்க கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கத் தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply