18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களுக்கு வாக்கு உரிமை சட்டமூலம் நாடாளுமன்றில் முன்வைப்பு.

0

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்களுக்கு வாக்கு உரிமையை வழங்கும் பொருட்டு வாக்காளர்களை பதிவு செய்யும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் முன்வைத்துள்ளதாக
சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 8 வயது பூர்த்தி அடையும் இளைஞர்களின் பெயர் உள்ளடங்கிய வாக்காளர் பெயர் பட்டியலை நான்கு மாதங்களுக்கு ஒரு முறை தயாரிக்க இதன் மூலம் சந்தர்ப்பம் கிட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது நடைமுறையில் உள்ள முறைமையின் படி ஜனவரி மாதம் முதலாம் திகதிக்கு சில தினங்களுக்கு முன்னரோ அல்லது அதன் பின்னரோ 18 வயது பூர்த்தி அடையும் இளைஞர்கள் அடுத்த ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடைபெற்றால் அதில் வாக்களிக்க சந்தர்ப்பம் எட்டுவதில்லை.

இதன் காரணத்தினால் அதில் மாற்றத்தை ஏற்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபையின் முதல்வர் காரியாலயம் அறிவித்துள்ளது.

Leave a Reply