இலங்கையில் முதன் முறையாக பெண் அதிகாரிகள் மூவர் பிரதி காவல்துறை மா அதிபர்களாக நியமனம்!

0

இலங்கையில் முதன் முறையாக பெண் அதிகாரிகள் மூவர் பிரதி காவல்துறை மா அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கமைய சிரேஸ்ட் காவல்துறை அத்தியட்சகர்களாக பணியாற்றி வரும் பெண் அதிகாரிகள் மூவரே உடன் அமுலுக்கு வரும் வகையில் பிரதி காவல்துறை மா அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகளாகக் கடமையாற்றிய ரேணுகா ஜயசுந்தர, நிஷாந்தி ஜயசுந்தர, பத்மினி வீரசூரிய ஆகியோரே இவ்வாறு காவல்துறைமா அதிபர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வாறு இலங்கையில் பெண் காவல்துறை அதிகாரிகள் பிரதி காவல்துறை மா அதிபர் களாக தரம் உயர்த்தப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பம் இது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.

Leave a Reply