யாழ் பல்கலைக்கழகத்தின் 35வது பொதுப் பட்டமளிப்பு!

0

யாழ் பல்கலைக்கழகத்தின் 35வது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது அமர்வு இன்று இடம்பெற்று வருகின்றது.

இந்த பட்டமளிப்பு நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு நிகழ்நிலையில் ஆரம்பமாகியது.

தற்போது நாட்டில் பரவி வரும் கொவிட் அச்சுறுத்தல் அசாதாரண சூழ்நிலை காரணத்தினால் பட்டமளிப்பு விழாவில் பெருமளவானோர் ஒன்று கூடுவதற்கு அனுமதிக்க முடியாது.

இதன் பிரகாரம் அதனை நிகழ்நிலையில் நடத்துவதற்கு தடை எதுவும் இல்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் இன்றைய தினம் மாணவர்களின் பட்டங்களை உறுதிப்படுத்துவதற்காக நிகழ்நிலை பட்டமளிப்பு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply