மக்களின் பாதுகாப்பு கருதி தற்போது நாடு பூராகவும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
நாட்டில் கொவிட் தொற்றுப் பரவலை தடுக்கும் முகமாக குறித்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் நாட்டில் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 12 மில்லியனை கடந்துள்ளது.
நாட்டில் இதுவரை 12,043,368 பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் அனுப்பப்பட்டுள்ளன.
நேற்றைய தினம் மாத்திரம் 99,548 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.