நேற்றைய தினம் இரவு வெளியான விசேட வர்த்தமானி அறிவிப்பு!

0

நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புகளை நிதி அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நேற்றைய தினம் இரவு வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த இராஜாங்க அமைச்சுக்கு பொறுப்பாக இருந்த அஜித் நிவாட் கப்ரால் அண்மையில் பதவி விலகி பின்னர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமனம் பெற்றுள்ளார்.

இந்த நிறுவனம் மற்றும் சட்ட கட்டமைப்பு ஆகியவற்றை நிதி அமைச்சின் கீழ் கொண்டு வரும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply