விசா செல்லுபடியாகும் கால நீடிப்பு தொடர்பில் வெளியான தகவல்.

0

விசா செல்லுபடியாகும் கால நீடிப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பெற்றுக்கொண்டுள்ள சகல விதமான விசா அனுமதி பாத்திரங்களினதும் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் மேலும் ஒரு மாத காலத்திற்கே இந்த வீசா அனுமதி செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மே மாதம் 11ஆம் திகதி எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் விசாக்களுக்கு அக்கால பிரிவுக்கான வீசா கட்டணங்கள் மாத்திரம் அறவிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எந்தவிதமான அபராதமும் அறவிடப்பட மாட்டாது எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply