மீண்டும் நாடாளுமன்றில் கூடவுள்ள கோப் குழு.

0

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்றைய தினம் மீண்டும் கூடவுள்ளது.

இதற்கமைய ஸ்ரீலங்கன் விமான சேவையை இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதற்கு முன்னர் கடந்த ஜூலை மாதம் 7 ஆம் திகதி ஸ்ரீலங்கன் விமான சேவை கோப் குழுவில் முன்னிலையாகியிருந்தது.

இந்நிலையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாக கலந்துரையாடுவதற்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply