ஜனாதிபதி கோட்டா பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

0

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ லஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்குஅதிரடி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.

இதற்கமைய தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பண்டோரா ஆவணங்கள் குறித்து உடனடியாக தீவிர விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படுள்ளது.

குறித்த உத்தரவை ஜனாதிபதி இன்று காலை பிறப்பித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

ஒரு மாத காலத்திற்குள் இந்த விசாரணைகளை நிறைவு செய்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Leave a Reply