நேற்றைய தினம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகள்.

0

நாடு பூராகவும் மக்களின் பாதுகாப்பு கருதி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்றையதினத்தில் மாத்திரம் 57,429 பேருக்கு கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் 13,975 பேருக்கு சைனோபார்ம் முதலாம் தடுப்பூசியும் 24,291 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் 1,062 பேருக்கு அஸ்ரா செனேகா முதலாவது தடுப்பூசியும் 5,473 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப்பட்டன.

அவ்வாறு 1,113 பேருக்கு பைசர் தடுப்பூசியும்,, 11,459 பேருக்கு இரண்டாவது தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 2 பேருக்கு மொடர்னா முதலாம் தடுப்பூசியும், 54 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டதாகத் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply