ஒரு தொகை கேரள கஞ்சா வைத்திருந்த
குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கமைய குறித்த சம்பவம் வெல்லாவெளி காவல்துறை பிரிவிற்குட்பட்ட புலியடி சந்திக்கு அருகில் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த பெண் காவல்துறை விசேட அதிரடிப்படையினரின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே கைது செய்யபட்டுள்ளார்.
அத்துடன் 38 வயதுடைய மண்டூர் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.