இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை

0

இலங்கையின் பல பகுதிகளிலும் இன்று இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய மேல், சப்பிரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் மாகாணங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

அத்துடன் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் .

மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Leave a Reply