சுன்னாகத்தில் காவற்துறையினர் துப்பாக்கிச் சூடு.

0

யாழ்ப்பாணம் மாவடடம் சுன்னாகம் பகுதியில் காவல்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைக்கவசம் இன்றி உந்துருளியில் பயணித்த இருவரை நிறுத்தி அவர்களுக்கு அபராதத்தை பதிவு செய்ய முற்பட்ட போதே அங்கு சென்ற பிரதேச சபை உறுப்பினர் காவல்துறையினருடன் முரண்பாடு இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்தப் பகுதியில் வாழும் மக்கள் கூடியதை அடுத்து நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

இந்நிலையில் குறித்த 3 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அதற்கான நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply