சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறார்களுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு.

0

பன்னாட்டு சிறுவர் தினத்தை நினைவு கூறும் முகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சிறார்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் நிகழ்வு அக்டோபர் மாதம் முதலாம் இரண்டாம் திகதிகளில் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டது.

சுவிஸில் வாழும் தமிழ் குடும்பங்கள் வழங்கிய நிதியுதவியின் கீழ் சுவிஸ் துர்க்கை அறக்கட்டளை இந்த உதவியை ஒழுங்குபடுத்தி வழங்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தது.

சுவிஸ் துர்க்கை அறக்கட்டளையின் திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் கலாநிதி. ஸ்ரீ ஞானேஸ்வரனின் தலைமையில் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சுவடுகள் அமைப்பு மற்றும் ஆசிரியர் பத்ம பிரஷன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

தமது கல்வி நடவடிக்கைக்கு மிகப் பெரும் உதவியாக சைக்கிள்களை வழங்கியது இருந்தது என பயனாளிகள் தெரிவித்திருந்தனர்.

Leave a Reply