சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணத்தால் தங்கத்தின் விலையில் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கம் இடம் பெறுகிறது.
இதற்கமைய செப்டம்பர் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் ஏறு முகமாக இருந்த தங்கம் விலை பின்பு குறைந்து வந்தது.
இதனால் கடந்த 24ஆம் திகதி அன்று ரூபாய் 35 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து பவுனுக்கு ரூபாய் 34,896 க்கு விற்பனையானது.
இந்நிலையில் அதன் பின்னர் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கம் கண்டு வந்தது.
ஆபரண தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூபா 12 குறைந்து ரூபாய் 4,336 ஆகவும், பவுனுக்கு ரூ 104 குறைந்து ரூபாய் 34,688 க்கு விற்பனையாகிறது.
இந்நிலையில் அதன் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்த பவுன் ரூபா 35 ஆயிரத்தை தாண்டியது.
இதன் பிரகாரம் ஆபரண தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூபாய் 56 உயர்ந்து ரூபாய் 4,392 க்கு விற்பனை செய்யப்பட்டது.
அவனுக்கு ரூபாய் 448 உயர்ந்து ரூபா 35,136க்கு விற்பனையானது.
அவ்வாறு வெள்ளியின் விலையில் கிராமுக்கு 70 காசு உயர்ந்து கிராம் ரூ.63.70-க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.700 உயர்ந்து ரூ.63,700-க்கு விற்றது.



