அல்லாஹ்வுக்கு பின்னர் முஸ்லிம் மக்கள் வழிபடும் ஒரே ஒரு தெய்வம் சரத் வீரசேகர!

0

இறைவன் அல்லாஹ்வுக்கு பின்னர்
முஸ்லிம் மக்கள் அனைவரும் வழிபடும் ஒரே ஒரு தெய்வம் சரத் வீரசேகர என்று அம்பாறை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த சில முஸ்லிம்கள் தன்னிடம் கூறியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அந்த அளவுக்கு தான் முஸ்லிம் மக்களுக்கு உதவி செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தென்னிலங்கை வானொலி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் இணை வைப்பது இல்லை என்பதும் குறிப்பிடதக்கது.

Leave a Reply