வெள்ளைச் சீனியை இறக்குமதி செய்வது தொடர்பில் புதிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டில் டாலர் கையிருப்பு தொடர்பான நெருக்கடி நிலை நிலவியதால் வெள்ளைச் சீனியை இறக்குமதி செய்யும் நடவடிக்கை இடை நிறுத்தப்பட்டிருந்தது.
இதற்கமைய மீண்டும் வெள்ளைச் சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளை சீனியை இறக்குமதி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் தமயந்தி கருணாரத்ன தெரிவித்திருந்த நிலையில் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.