இலங்கையில் எதிர்வரும் சில தினங்களில் பெட்ரோல் டீசல்களின் விலை அதிகரிக்கப்படலாம்!

0

இலங்கையில் எதிர்வரும் சில தினங்களில் பெட்ரோல் டீசல்களின் விலை அதிகரிக்கப்படலாம் என பெற்றோலிய வளத்துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதியாக நாட்டில் எரிபொருள் விலை கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி இறுதியாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ஆகஸ்ட் 31 ஆம் திகதியிலிருந்து 70 பில்லியன் டொலர்கள் நட்டம் ஆகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மற்றும் பல காரணிகளை கூறி அரசாங்கம் விரைவில் பெரும்பாலும் அடுத்த வாரம் எரிபொருளின் விலையை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply