சிகரெட்டு விலையை அதிகரிக்க தீர்மானம்.

0

சிகரெட்டு விலையை அதிகரிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கமைய சிகரெட்டுக்கான வரியை அதிகரிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பெரும்பான்மையானோர் உள்ளதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 89.3 சத வீதமானோர் சிகரெட்டு கான வழியை அதிகரிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு குறித்த கணக்கெடுப்பில் அடிப்படையில் 31 சதவீதமான ஆண்கள் இன்னும் புகை பிடிப்பவர்களாக இருப்பதுடன் மேலும் 26 சதவீதமானவர்கள் அதிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் 43 சதவீதமானவர்கள் புகை பிடிக்காதவர்கள் என மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.

அவ்வாறு சிகரெட்க்கான விலையை எவ்வளவு அதிகரிக்க வேண்டும் என கேள்வி எழுப்பப்பட்டிருந்த நிலையில், அதற்கு 59.1 சத வீதமானோர் 25 ரூபாவிற்கு மேல் விலை அதிகரிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

Leave a Reply