சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலம் தொடர்பில் வெளியான அறிவிப்பு.

0

காலாவதியாகும் சகல சாரதி அனுமதிப்பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 30-ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் செல்லுபடியாகும் காலம் அதை காலாவதியான திகதியில் இருந்து மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1-ஆம் திகதியிலிருந்து 2022 மார்ச் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் காலாவதியாக உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply