வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கான விசேட அறிவித்தல்!

0

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பும் பயணிகளுக்கான புதிய சுகாதார வழிகாட்டல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது,

இதற்கமைய சர்வதேச நாடுகளிலிருந்து இலங்கையர்கள் நாடு திரும்பும் போது வெளிவிவகார அமைச்சு அல்லது சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் கீழ் பதிவினை மேற்கொள்ளத் தேவையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையிலிருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளுக்கான சுகாதார வழிகாட்டியில் இந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டவர்கள் நாட்டிற்கு வரும் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறையில் தொடர்பிலும் அந்த சுகாதார வழிகாட்டியில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply