அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டன.

0

அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 400 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய குறித்த கொள்கலன்கள் டொலர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சனையினால் துறைமுகத்தில் தேங்கியிருந்தன.

இந்நிலையில் கொழும்பு துறைமுகத்தில் தேங்கி காணப்படும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அண்மையில் இந்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply