மேல் மாகாண முன்னாள் ஆளுநர் மீண்டும் விளக்கமறியலில்

0

சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட
குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத்சாலி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய எதிர் வரும் 12 வரை இவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் முன்னாள் ஆளுனர் அசாத் சாலி கடந்த மார்ச் மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு ஷரீஆ சட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டார்.

இதனால் இவர் கடந்த மார்ச் 16ஆம் திகதி குற்ற புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply