தனியார் பேருந்துகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!

0

தற்போது விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி நீக்கபடும் வேளையில் தனியார் பேருந்துகளில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கமைய குறித்த விடயத்தை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் மற்றும் அமைப்பு வெளியிட்டுள்ளது.

தம்புள்ளையில் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயத்தை, அந்த அமைப்பின் தலைவர் நிலந்த ஏக்கநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அக்டோபர் முதலாம் திகதி முதல் தனியார் பேருந்துகளில் பணிபுரியும் ஊழியர்கள் கோவிட் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் பெற்றிருப்பது கட்டாயமாகும்.

பேருந்து ஊழியர்கள் மற்றும் பயணிகள் முகக்கவசம் அணிவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதுடன், பேருந்து நடத்துனரே அதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும்.

ஆசன எண்ணிக்கைகளுக்கு அமைய மாத்திரமே பயணிகள் பயணிக்க வேண்டும். அரச மற்றும் தனியார் துறைகளில் பணி புரிகின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

அத்துடன், கூடுதலான கட்டணம் அறவிடக்கூடாது. பேருந்துகளில் யாசகம் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது. பேருந்தில் வெற்றிலை மெல்லுதல் மற்றும் புகைப்பிடித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

அதன் முழுப் பொறுப்பும் நடத்துனருக்கே உள்ளது. இந்த புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கண்காணிப்பதில் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பரிசோதகர்கள் நாடு முழுவதும் சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply