காட்டு யானையின் தாக்கத்தால் பலத்த சேதம்-மக்களை கவலை.

0

திருகோணமலை மாவட்டம் பாலம்போட்டாறு பகுதியில் உள்ள பத்தினிபுர கிராமத்தில் நேற்றிரவு நுழைந்த காட்டு யானையால் பலத்த சேதங்கள் விளைவிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இரவில் குடியிருப்பு காணிக்குள் நுழைந்த காட்டு யானையால் தென்னை, வாழை உள்ளிட்ட பயிரினங்களை துவம்சம் செய்துள்ளதாகவும் வேலியையும் நாசமாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தேங்காய் காய்க்கும் தென்னை மரத்தை அடியோடு பிடுங்கி துவம்சம் செய்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கின்றனர். தோட்டச் செய்கையை நம்பியே வாழ்வாதாரத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவிக்கின்றனர்.

இரவு நேரங்களில் நிம்மதியாக தூங்க முடியாத அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். பல முறை சம்மந்தப்பட்ட தரப்பினர்களுக்கு இது தொடர்பில் கூறியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அங்கலாய்க்கின்றனர்.

பாதுகாப்பான மின்சார யானை வேலியை அமைத்து யானை தொல்லையில் இருந்து பாதுகாக்குமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply