வழிபாட்டு தலங்களுக்கு சென்று வழிபட அனுமதியளிக்க வேண்டும்.

0

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த அறிக்கையில் தமிழகத்தில் கொவிட்டுக்கு எதிராக தமிழ் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் விழுமியங்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும்.

அத்துடன் கொவிட் தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் இன்னும் கூடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றால் கொவிட் பரவல் அதனால் ஏற்படும் பாதிப்புகளை வெகுவாக குறைக்க முடியும்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொவிட் தொற்றால் தினசரி பாதிப்பு சுமார் 2 ஆயிரத்துக்கும் கீழ் என்ற நிலையில் இருந்தாலும் பரவல் தொடர்கின்றது என்பதுடன் சாதிக்கும் அதிகரிக்கின்றது.

அத்துடன் தமிழக அரசு, தனிமனித இடைவெளியும், முகக் கவசம் மிக மிக அவசியம் என்பதை பொதுமக்களுக்கு கட்டாயத்தின் அடிப்படையில் வலியுறுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்துக்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் விரதமிருந்து கோவிலுக்கு செல்வதும், கிறிஸ்தவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் சபைக்கு ஆராதனைக்கு செல்வதும், இஸ்லாமியர்கள் வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக செல்வதும் வழக்கமானது.

ஆனால் கொவிட் விதிமுறைகளால் வெள்ளி, சனி, ஞாயிறு அன்று கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள், மசூதிகள் பொதுமக்களின் வழிபாடுகளுக்கு அனுமதி இல்லை.

இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் கொரோனாவுக்கு ஆக விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளில் கிறிஸ்தவ ஆலயங்கள், கோவில்கள், மசூதிகள் என்பவற்றுக்கு சற்று தளர்வுகள் கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆகவே தமிழரசு வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் வெள்ளி,சனி ஞாயிற்றுக்கிழமைகளிலும் கோவில்கள்,தேவாலயங்கள், மசூதிகளில் பொது மக்களின் வழிபாட்டு அனுமதி வழங்கிட முன்வர வேண்டும் என்றும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply