மிரிஹான காவல்துறை அதிகாரி பிரிவிற்கு உட்பட்ட நுகேகொட மணல் பூங்காவில் சட்டவிரோதமான முறையில் ட்ரோன் கேமராவை வானில் பறக்க செய்த இரு நபர்கள் கைது செயப்படுள்ளனர்.
இதற்கமைய குறித்த நபர்கள் நேற்றைய தினம் மிரிஹான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த ட்ரோன் கேமராவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று கங்கொடவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.